
தடுப்பூசி வதந்திகளை நம்பவேண்டாம் : பிரதமர் மோடி
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்
நமது சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர். கடந்த ஓராண்டு காலமாக, இந்த தொற்றுநோயை சமாளிப்பது தொடர்பாக அவர்கள் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ள அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலைமையைச் சமாளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுப்பதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாக மோடி கூறினார்.
மேலும் தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள முடியும் எனவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!