• Saturday, 05 July 2025
தடுப்பூசி வதந்திகளை நம்பவேண்டாம் : பிரதமர் மோடி

தடுப்பூசி வதந்திகளை நம்பவேண்டாம் : பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்

நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா வைரஸ் நமது பொறுமையை மிகவும் சோதித்துள்ளது மட்டுமின்றி உலக அளவில் தீவிரமாகியிருப்பதாக தெரிவித்தார். கொரோனா வைரசின் முதலாவது அலையை வெற்றிகரமாக சமாளித்த பின் நமது நாட்டின் மன உறுதி அதிகமாக இருந்தது என்றும், இந்த 2வது அலை அனைவரையும் உலுக்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நமது சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர். கடந்த ஓராண்டு காலமாக, இந்த தொற்றுநோயை சமாளிப்பது தொடர்பாக அவர்கள் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ள அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலைமையைச் சமாளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுப்பதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாக மோடி கூறினார்.

மேலும் தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள முடியும் எனவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!